தமிழகத்தில் கொரோனாவால் 3,5 வயது சிறுமிகள் உட்பட ஒரே நாளில் 97 பேர் பலி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனாவால் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அறியலூரை சேர்ந்த 5 வயது சிறுமி மற்றும் நாகையை சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50 வயதிற்குப்பட்ட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்த 82 பேரில், தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து 61-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 89 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

அதில் அதிகபட்சமாக, சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,092 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 246  பெரும், மதுரையில் 233 பேரும், திருவள்ளூரில் 229 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,677 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,064 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.