சாத்தான்குளம் கொலை வழக்கு.. மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்துப் வரும் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் கைது கைது செய்யப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஐ பால்துரையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.