புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கொரோனா.!

நாடு முழுவதும் ஊரடங்கு  உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகைகள் எடுத்து வருகிறது.இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1397 பேர் பாதிக்கப்பட்டு 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 57 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 124 அதிகரித்துள்ளது. 

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர். அதில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 616 பேர் தாங்களாகவே முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் என்றும் கொரோனா பாதிப்புள்ள 50 பேரில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்