கொரோனா எதிரொலி! மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு!

கொரோனா எதிரொலியால், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து  மக்களை காப்பாற்ற இந்தியா முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வரும் 26-ந்தேதி 7 மாநிலங்களில் 18 இடங்களில்  நடக்கவிருந்த மாநிலங்களவை தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் நிலவரத்தை கருத்தில் கொண்டு புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.