#Corona death: 3 வது நாளாக இன்றும் 100ஐ கடந்த பலி எண்ணிக்கை.!

3 வது நாளாக இன்றும் 100ஐ கடந்த பலி எண்ணிக்கை.

கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 112 பேர் கொரோனாவால் உயிரிழப்பு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்ததுள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் 28 பேர் தனியார் மருத்துவமனையிலும் 84 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் இன்று 997 பேருக்கு கொரோனா உறுதி.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.