#Corona death: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5,000-ஐ நெருங்குகிறது.!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று 119 பேர் பலி.

தமிழகத்தில் மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,020 பேர் கொரோனாவிலிருந்து குணம்மடைந்து வீடு திரும்பினர்.

சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு.சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,005பேருக்கு கொரோனா சென்னையில் இன்று 12 பேர் உயிரிழப்பு.

நான்காவது நாளாக மீண்டும் ஒரே நாளில் 100ஐ தாண்டிய உயிரிழப்பு.

இன்று மேலும் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 4,927 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் 85 பேர் அரசு மருத்துவமனையிலும், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.