அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்.! உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது.!

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெரிதாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கி, இதுவரை இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் என பல நாடுகளை இந்த வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. 

இதுவரை உலகம் முழுவதும் 42,344 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் . 8,60,170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,78,441 பேர் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இத்தாலியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.