#Breaking : அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.இந்நிலையில்   கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.

 ஏற்கனவே அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி ஆகியோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் . அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவியும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.