விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்! வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜயை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில், சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொளவதற்காக ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். கூட்ட நெரிசல் அதிகமான நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சினிமா பிரபலங்களும் இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து போலீசார் அங்குள்ளவர்களை களைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தங்களிடம் பாஸ் இருப்பதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தஹத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.