உரையாடல்,ஆட்டோகிராப் போடுதல் ! தோனியின் புதிய வீடீயோவை வெளியிட்ட சென்னை அணி

உரையாடல்,ஆட்டோகிராப் போடுதல் ! தோனியின் புதிய வீடீயோவை வெளியிட்ட சென்னை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கோடைகால கொண்டாட்டமாக 13-வது ஐபிஎல் தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடங்க இருந்தது.ஆனால் கொரோனா காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும்  ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .

இதற்கு இடையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி  ,துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா , ஹர்பஜன்சிங் ,அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.தற்போது கொரோனா காரணமாக பயிற்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.அந்த வீடியோவில்,தோனி மைதான நிர்வாகிகளுடன் உரையாடுவது, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  

Join our channel google news Youtube