பீகாரில் தொடரும் சோகம் ! பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 100 குழந்தைகள் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.மூளைக் காய்ச்சல் அறிகுறியுடன்  மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக குறைந்தது காணப்படும்.
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் மட்டும் ஆபத்தான மற்றும் இக்கட்டான நிலையில்  பல குழந்தைகள் இரண்டு அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.கடந்த மூன்று தினங்களாக 43க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.ஆனால் இதன் தாக்கம் திடீரென்று அதிகரித்துள்ளது.மேலும் 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகை ஆகும்.
இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது  மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100  ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.