தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை!!நலமுடன் முடியும்!!பன்னீர்செல்வம் நம்பிக்கை

  • அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
  • தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

Related image

இந்நிலையில் இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது . எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்.தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், நலமுடன் முடியும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment