பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காங்கிரஸ் அதிகாரி!

புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் சிவராந்தம் பேட்டையை சேர்ந்தவர் தமிழரசன்.இவர் காங்கிரஸ் கட்சியில் சமூக வலைதள பொறுப்பாளராக உள்ளார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ஒரு நாள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.பின்னர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

இதன் காரணமாக அந்த பெண் கற்பமாகியுள்ளார்.இந்த சம்பவம் யாருக்கும் தெரியாதவாறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின் கருக்கலைப்பு செய்துள்ளார்.அதன் பின்பு மீண்டும் அந்த பெண்ணை ஆசை வார்த்தைகளை கூறி வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண் மீண்டும்  கற்பமாகியுள்ளார்.அதன் காரணமாக தமிழரசனிடம் தன்னை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார்.அதற்கு அவர் கருவை களைத்த பின் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் கருவை களைத்த பின் தமிழரசன் அந்த பெண்ணை விட்டு விளக்கியுள்ளார்.அந்த பெண் தமிழரசனை நேரில் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் தமிழரசன் திருமணம் செய்து கொள்வதற்கு மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றன.