காஷ்மீர் விவகாரம் : திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்-கே.எஸ்.அழகிரி

காஷ்மீர் விவகாரம் : திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்-கே.எஸ்.அழகிரி

மத்திய அரசு  காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து  370-வதை  ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.

இதனையடுத்து  டெல்லியில் 22-ஆம்  தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார் .டெல்லி, ஜந்தர் மந்தரில்  காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி-களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக எம்.பி-க்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்  என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube