காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு!

மக்களவைத் தேர்தல் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி கட்ட தேர்தல் இன்று வடமாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே 23 அன்று இந்தத் தேர்தலுக்கான ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று இரண்டாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தை காங்கிரஸுடனான கூட்டணியா அல்லது மூன்றாவது அணிக்கான பேசி வார்த்தையா என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை பாஜக ஆட்சிக்கு எதிரானது என்று மட்டும் தெரிகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment