பொருளாதார சரிவைக் கண்டித்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம்-காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவிப்பு

நாட்டின் பொருளாதார சரிவைக் கண்டித்து அக்டோபர் 15ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே பொருளாதார மந்த நிலை இருந்து வருகிறது.இதன் காரணமாக ஆட்டோமொபைல் துறை விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.இதற்கு காரணம் பணப்புழக்கம் குறைந்தது,ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.ஆனால் எதிர்க்கட்சிகள் பொருளாதாரம் குறித்து கடும் விமர்சனங்கள் செய்து வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்,  நாட்டின் பொருளாதார சரிவைக் கண்டித்து அக்டோபர் 15ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை காங்கிரஸ் சார்பில் போராட்டம்  நடத்தப்படும்.நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று  வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.