மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் அனுமதி..!

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் , காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் 03-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து 51 நாள்கள் சிறையில் இருந்த டி.கே.சிவகுமார் கடந்த மாதம் 24-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு டி.கே.சிவகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
இதனால் டி.கே.சிவகுமார் பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வருகிறார்.

author avatar
murugan