ராமர் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! குடியரசு தலைவர் ட்வீட்!

ராமர் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவிருந்த நிலையில், இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட, பல்வேறு தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி, ராமஜென்ம பூஜையில்  40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.  இதனையடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அயோத்தியில் ராம் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சட்டத்திற்கு இணங்க கட்டமைக்கப்பட்டிருப்பதால், இது இந்தியாவின் சமூக நல்லிணக்க உணர்வையும் மக்களின் வைராக்கியத்தையும் வரையறுக்கிறது. இது ராம்ராஜ்யாவின் கொள்கைகளுக்கு ஒரு சான்றாகவும் நவீன இந்தியாவின் அடையாளமாகவும் இருக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.