நிறைவுபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:பரிசுகளை அள்ளிய மாவீரன்

  • மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது
  • நேற்று நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
  • இறுதியாக நிறைவடைந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
  • 15 காளைகளை அடக்கிய  ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு
  • பரிசுகளை வழங்கும் முதல்வர், துணைமுதல்வர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய  ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது:

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது.

நேற்று நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:

மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி நேற்று  காலை 8 மணி முதல் நடைபெற்றது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1400காளைகள் சீறிப்பாய, 848மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். 7ஏஎஸ்பிக்கள், 15டிஎஸ்பிக்கள் உட்பட 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இறுதியாக நிறைவடைந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:

Image result for ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உட்பட 40பேர் காயம் அடைந்துள்ளனர்.  படுகாயமடைந்த 15பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

15 காளைகளை அடக்கிய  ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு:

இந்நிலையில் போட்டியின் முடிவில் , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய  ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.மேலும் இவருக்கு பல பரிசுகள் அறிவிக்கப்பட்டது . அவருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.அதேபோல் சிறந்த காளையாக பரம்பப்பட்டி செல்லியம்மன் கோயில் காளை தேர்வு செய்யப்பட்டு, கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.

பரிசுகளை வழங்கும் முதல்வர், துணைமுதல்வர்:

சென்னையில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் பழனிச்சாமி சார்பில் கார் பரிசாக வழங்கப்படும் என்றும் சிறந்த காளைக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் சார்பில் மற்றோரு காரும் வழங்கப்படும்  என்று  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment