கேரளாவில் விடில்லாதவர்களுக்கு வீடு; மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழங்கிய நடிகர் மம்மூட்டி

கேரள மாநிலம் கொச்சி அருகே சிபிஎம் திருப்புணிப்புரா ஏரியாகமிட்டி சார்பில் கட்டிக் கொடுத்துள்ளவீட்டின் சாவியை மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்முட்டியிடமிருந்து வீ்டற்றவர்களாகயிருந்த வேணு-குமாரி தம்பதியினர் மகள்அமுதாவுடன் இணைந்து பெற்றுக் கொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு சொந்தமாக உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் பிளாஸ்டிக் விரிப்பால் மூடப்பட்ட குடிசையில் இந்த குடும்பம் வசித்து வந்துள்ளது. கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த இந்த தம்பதியினர் வயதுக்கு வந்த இரண்டு பெண்குழந்தைகளுடன் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து நல்லதொரு வீட்டில் வசிக்கும் வாய்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியிருக்கிறது.இதுபோல் 30 வீடுகளை கட்டி வீடற்றோருக்கு வழங்க அண்மையில் நடந்த சிபிஎம் ஏரியா கமிட்டி மாநாட்டில் முடிவு செய்திருந்தனர். அதன்படிமுதல் வீடு குமாரி குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ராஜீவ், “லைப் திட்டத்தில் ஒரு வீடுமட்டுமல்ல ஒரு வாழ்க்கையை வழங்கவேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்” எனக் குறிப்பிட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment