பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த தளபதி.! காரணம் என்ன தெரியுமா.?

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு தேதி கொடுக்க இயலாது என்று கூறி விஜய் மறுத்ததாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் மணிரத்னம். தற்போது இவரது இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆண்டே இந்த படத்தின் பணிகளை தொடங்கினாராம்.அதனையடுத்து ஒரு சில காரணங்களால் தள்ளி போய் விட்டதாம்.

பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டு அணுகியது விஜய் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு என்று கூறப்படுகிறது. ஆனால் விஜய்யிடம் மணிரத்னம் அவர்கள் இந்த படத்திற்காக ஒரு வருட தேதிகள் கேட்டதாகவும், அவ்வளவு தேதிகள் எல்லாம் கொடுக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டதா கவும் கூறப்படுகிறது. மேலும் மகேஷ் பாபு, தனக்கு செக்கன்ட் ஹீரோவாக நடிக்க விருப்பமில்லை என்று கூறி மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.