கல்லூரி மாணவி கொலை வழக்கு: கடலூர் ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு

சுந்தரமூர்த்தி என்பவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி சேர்ந்தவர் ஆவார்.இவரது மனைவி தினக்கூலி வேலைக்கு செல்பவர் ஆவார்.இவர்களுக்கு திலகவதி என்ற மகள் உள்ளது .இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.சில தினங்களுக்கு முன்பு  இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த அவர் கத்தியால் குத்தப்பட்டு மயக்க நிலையில் இருந்தார் .அங்கு வந்த அந்த பெண்ணின் உறவினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், பாதுகாப்பு வழங்க கோரியும் கடலூர் ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர்.இதன் பின் மாணவியின் பெற்றோர் கூறுகையில்,என் மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தனர்.

Leave a Comment