ஆடு இறந்தததால் நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு ரூ.2.68 கோடி நஷ்டம்..!

ஒடிசாவில் இந்திய நிறுவனத்தின் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது.இந்த சுரக்கத்தில்   இருந்து லாரி மட்டும் ரயில் மூலமாக நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நிலக்கரி ஏற்றி செல்லும் லாரியின் குறுக்கே  ஒரு ஆடு சென்றதால் லாரி மோதி ஆடு உயிரிழந்தது.
இதற்கு நஷ்ட ஈடாக 60,000 ரூபாய் கேட்டு அப்பகுதி மக்கள் நிலக்கரி ஏற்றி செல்லும் ரயில் பாதையில் மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 02.30 வரை இப்போராட்டம் நடந்தது.
இதனால் ரயில் மூலம் நிலக்கரி எடுத்துச்செல்வது தடைப்பட்டது.  இந்த தடையால் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக  சுரங்க நிறுவனம் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.

author avatar
murugan