பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி.
இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.இதில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டது.இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி சென்றார்.இவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றனர்.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி.டெல்லியில்  பிரதமர் இல்லத்தில் சந்தித்தார் முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி.