அதிமுக அமைச்சர் – திமுக எம்எல்ஏ இடையே வாக்குவாதம்

வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி திமுக எம்எல்ஏ நந்தகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் ,முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி , திமுக எம்எல்ஏ நந்தகுமார்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏ நந்தகுமார் பேசுகையில் ,திடீரென்று அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.