சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை தீ வைத்து கொலை செய்த பொதுமக்கள் ..!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் காட்டில் விறகு பொறுக்க  சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருவரையும் தாக்கி உள்ளார்.

அதில் அப்பெண் மட்டும் தப்பி அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபரிடம் சிக்கி கொண்ட மாற்றுத்திறனாளி சிறுமி அவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த உள்ளூர் மக்கள் நேற்று குற்றவாளி கடுமையாகத் தாக்கி உயிருடன் தீவைத்து கொலை செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வன்முறை என மக்களிடம் கூறியுள்ளனர்.  சட்டத்தை மதிக்கும் மாறு  மக்களிடம் கூறியுள்ளார்கள்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

author avatar
murugan