குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை- முதலமைச்சர் பழனிச்சாமி

குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை- முதலமைச்சர் பழனிச்சாமி

குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது என்று  முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவை 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில், தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை. குடியுரிமை சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என்பதை திமுக விளக்க வேண்டும் .குடியுரிமை சட்ட விவகாரத்தை வைத்து மக்களை ஏமாற்றி தவறான தகவல் பரப்புகிறார்கள். குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது . தமிழக அரசிடம் இல்லை என்று  முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

Join our channel google news Youtube