Breaking News: சென்னை வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங் ..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த 2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங்  தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை வந்த சீன அதிபருக்கு மேளதாள வாத்தியங்கள் , கலை நிகழ்ச்சி முழுக்க தமிழகம் சார்பில் சீன அதிபருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்கும் சீன அதிபர் இன்று மாலை கோவளத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். நாளை கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கேவ் ஹோட்டலில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங்  சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக மேம்பாடு , எல்லை அமைதி உள்ளிட்டவை பற்றி பேச வாய்ப்பு உள்ளது.

author avatar
murugan