சீனாவினை விமர்சனம் செய்ததற்காக சீன சட்ட பேராசிரியர் கைது!

சீன அரசாங்கத்தை விமர்சனம் செய்ததற்காக சீனாவின் சட்ட பேராசிரியர் ஆகிய ஜி ஜங்ரூன்அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவுவதற்கு சீனாவின் உகைன் நகரில் முதல் முதலில் உருவாகியது தான் காரண. இந்நிலையில், சீனாவின் கொரானா வைரஸ் பரவியதற்கு சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கின் மோசமான செயல்பாடுகள் தான் காரணம் என சீனாவின் சட்ட பேராசிரியர் ஜி ஜங்ரூன்அவர்கள் விமர்சனம் செய்து கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதி வந்துள்ளார்.

மேலும் சீனா நாட்டின் அதிபர் துணை நிர்வாக கட்டமைப்பை குறைத்து வருவதாகவும் அவர் பல்வேறு கேள்விகள் எழுப்பி கட்டுரை எழுதியுள்ளார். இதன் காரணமாக சீன தலைநகர் பீஜிங் நகரில் வசித்து வந்த அவர் தற்போது வீட்டில் இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பேராசிரியர் ஜி ஜங்ரூன் அவர்களின் நண்பர்கள் உறுதி செய்துள்ளனர்.

author avatar
Rebekal