சிதம்பரம் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி…குடியரசு தினக் கொண்டாட்டம்..!

  • நாட்டின் 71 வது குடியரசு தினம் கோலகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கோடி ஏற்றப்பட்டது. 

நாடு முழுவதும் இன்று 71 வது குடியரசு தினம் சிறப்பாக நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

1

இதற்கு முன் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக்கொடியானது வைக்கப்பட்டு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது அதன் பின்னர் மேளதாள முழக்கங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தேசியக்கொடி கோபுரத்தில் ஏற்றப்பட்டது அதன் பின்னர் வழிபாட்டிற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

author avatar
kavitha