கொரோனாவால் சீரழிந்து கொண்டிருக்கிறது சீனா..! இக்கட்டான நிலையில் நாடு..!உரைத்தார் அதிபர்

கொரோனாவால் சீரழிந்து கொண்டிருக்கிறது சீனா..! இக்கட்டான நிலையில் நாடு..!உரைத்தார் அதிபர்

  • சீனா  இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது அதிபர் ஜீ ஜின்பிங் 
  • கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  56 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நிலையில் நிலையில் சீனா நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழு கூட்டத்தில் பேசிய அந்நாட்டு ஜீ ஜின்பிங் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரசால் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது மேலும் மிகவும் அவசியமானது என்றும் கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர் உறுதியான நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி இந்த நோயின் தடுப்பு மருந்துகள் மற்றும் துல்லியமான கொள்கைகளை நாம் செயல்படுத்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha
Join our channel google news Youtube