சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது! கொரோனா வைரஸ் பரவ காரணம் இதுதான்! – நியூயார்க் போஸ்ட் செய்தி

முதலில் சீனாவில் மிக தீவிரமாக பரவி வந்த  கொரானா வைரஸ் தொற்றானது, அதன் பின் மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் சீனாவின் உகான் நகரத்தில் வனவிலங்குகளை விற்பனை செய்யும் சந்தை ஒன்றில் இருந்து வைரஸ் பரவியதாக உலகம் நம்பி வருகிறது.

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் என்கின்ற எழுத்தாளர்கள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து, நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையில் இதுகுறித்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.  அந்த கட்டுரையில், சீனாவின் உகான் நகரத்தில்தான் சீனாவின் நுண்ணுயிரிகள் ஆய்வகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அங்கு பல கிருமிகளை சீனா வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பரவியதை தொடர்ந்து சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் வைரஸ் என்ற புதிய மேம்பட்ட வைரஸ்களை கையாளும் வகையில் நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் பாதுகாப்பு  நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஸ்டிவன் தனது வாதத்திற்கு ஆதாரமாக இதனை எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய சீன அதிபர் ஜீ ஜின்பிங், எதிர்காலத்தில் வைரஸ் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இதன் மூலம் தங்களிடம் கொடூர கிருமிகள் பாதுகாக்கப்பட்டு வருவது சீன அதிபர் மறைமுகமாக ஒப்புக் கொண்டதாக கட்டுரையாளர் ஸ்டீபன் சுட்டிக்காட்டினார்.

உயிரியல் ஆயுதம் குறித்து ஆய்வு செய்த முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அதிகாரி கூறும்போது இந்த இன்ஸ்டிட்யூட் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுத திட்டத்துடன் தொடர்புடையது என்றும்,  இன்ஸ்டிட்யூட்டில் உள்ள சில ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அடிப்படையில் சீனா உயிரியல் திட்டத்துடன் குறைந்தபட்சம் தரக்கூடியது. ஆனால் சீன உயிரியல் போரின் முக்கிய அங்கமாக இல்லை. உயிரினங்களுக்கான பணிகள் உள்ளூர் ராணுவ ஆராய்ச்சி ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன என்றும் கூறியிருந்தார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.