குழந்தை விற்பனை வழக்கு : இதுவரை 30 குழந்தைகள் விற்பனை

ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்திவருகின்றனர்.தற்போது சிபிசிஐடி விசாரணையில் ,ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அவற்றில் 24 பெண்குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

Leave a Comment