மத்திய உருளை கிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது …!பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

உதகையில் உள்ள மத்திய உருளை கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி  பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், உதகையில் உள்ள மத்திய உருளை கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது. ஆய்வு மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். உதகை,கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.1957 ல் துவங்கப்பட்ட இந்த மையம், 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment