என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் – முதலமைச்சர் பழனிசாமி

என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் – முதலமைச்சர் பழனிசாமி

என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது. அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது.
 
தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும்.
நோயின் தீவிரம் அறியாமல் பொதுமக்கள் வெளியில் நடமாடுகின்றனர், அரசின் சட்டத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டும்.ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் 
Join our channel google news Youtube