முதல்வர் பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில், மருத்துவக்குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய பின்னர், ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், காலை 10 மணிக்கு  முதல்வர் பழனிசாமி , அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனையில் பள்ளிகளை திறப்பது  10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan