இன்று அத்திவரதரை தரிசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

இன்று அத்திவரதரை தரிசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

இன்று முதலமைச்சர் பழனிசாமி அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 23-வது நாளான அத்திவரதர்  தரிசனம் இன்றும் நடைபெற்று வருகிறது.நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.இதனால் மாவட்ட நிர்வாகம் அங்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் இன்று மதியம்  தமிழக  முதலமைச்சர் பழனிசாமி  அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.முதலமைச்சர் வருகையையொட்டி அங்கு 4000 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Join our channel google news Youtube