புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.!

கிருஷ்ணகிரியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்காக போலுப்பள்ளியில் 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.348 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் என பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்