கடல்நீரை குடிநீராக்கும் 2 வது நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில்  கடல்நீரை குடிநீராக்கும் 2 வது நிலையத்திற்கு, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. இந்த 2வது ஆலை நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திறன் கொண்டது ஆகும்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை பணி 2021ல் முடிக்கப்பட்டு நீர் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.  மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம் ஆகும் என்றும் மழை பெய்தால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் கூறியுள்ளார். எந்தெந்த பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டுவருகிறது என்று கூறியுள்ளார்.