தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்  பழனிசாமி

முதலமைச்சர் பழனிச்சாமி தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமி முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து ,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

இந்த நிலையில் இன்று  உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரூ. 7175 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்  பழனிசாமி. இதன் மூலமாக சுமார் 40000 பேருக்கு மேல்  வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.