இன்று 12 குழுக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனாவின் நிலை, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் விளைவாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தமிழகத்தில் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் கொரோனாவின் நிலை, தடுக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இதற்கு இடையில் இன்று தமிழகத்தில் கொரோனாவின் நிலை, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.கொரோனாவை தடுக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.