தமிழக முதல்வர் ஒரு விவசாயி….விவசாயிகள் துயரம் அறிந்தவர்….அமைச்சர் புகழாரம்…!! 

தமிழக முதல்வர் பழனிசாமி ஒரு விவசாயி எனவே விவசாயிகளின் துயரங்களை அறிந்து செயற்படுகின்றார் என்று எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

கோவை சுந்தராபுரத்தில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக ஆட்சியை கவிழ்க்க, மு.க ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறிய அவர், கொள்ளையர்கள், பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் போன்றவர்களுக்கு, பின்னால் திமுக இருப்பதாக சாடினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment