சொத்து குவிப்பு வழக்கு.! சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிய முதலமைச்சர்.!

  • ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு  வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி வழக்குப் பதிவு சிபிஐ செய்தது.
  • நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு  வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி வழக்குப் பதிவு சிபிஐ செய்தது.பின்னர் 2012 -ம் ஆண்டு மே மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்தனர். இதையடுத்து 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆண்டு மே மாதம் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.

அதனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை கடந்த 03-ம் விசாரித்த நீதிமன்றம்  “குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் , எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அனைவரும்  சாதாரண மனிதர்தான் ” என கூறியது.

மேலும் இன்று  ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டது.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி ஜெகன் மோகன் ரெட்டி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

author avatar
murugan