தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா எதிரொலியால் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் குறித்து தலைமை நீதிபதி – தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனையில் உள்ளனர் .