ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு !நாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.பின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு  5 நாட்கள் சிபிஐ  காவலில் வைக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

முன்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிபிஐ மற்றும்  அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில்  இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ காவலில் உள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு வருகின்ற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் வருகின்ற 26-ஆம் தேதி வரை சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம் .இந்த நிலையில் நாளை சிதம்பரம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.