காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை.
சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை  சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.அதில்,அமலாக்கத்துறை மனுவை ஏற்று, அக்டோபர்  24-ஆம் தேதி வரை சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அக்டோபர்  24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று .சிதம்பரத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை.ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் ஒருவாரம் அமலாக்கத்துறை அனுமதி கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.