டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் இன்று ஆஜர்

அமலாக்கத்துறை காவலில் உள்ள  சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கடந்த 17-ஆம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை  சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
அதில்,அமலாக்கத்துறை மனுவை ஏற்று, அக்டோபர்  24-ஆம் தேதி வரை சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அக்டோபர்  24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.இதனையடுத்தது சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
முன்னதாக  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்தது தொடர்பாக சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்  ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை இன்று  விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.