திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.

மேலும் காவல் எடுத்து விசாரணை செய்து வந்தது.பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் கடந்த 5-ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.ஆஜரான அவருக்கு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 -ஆம் தேதி வரை (அதாவது இன்று வரை )திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.மேலும் தனது 74 -வது பிறந்த நாளில்  கூட திகார் சிறையில் தான் இருந்தார்.

இந்த நிலையில் இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிவடைய உள்ள நிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்படுவாரா?இல்லையா ? என்பது தெரிந்துவிடும்.