சிறையில் இருக்கும் சிதம்பரம் ! ஜாமீன் மனு இன்று விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில்  உள்ளார். இதனால் அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி மனு தாக்கல்  செய்தார் .ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.

அங்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நடைபெற்ற விசாரணையில் சிதம்பரத்தின் ஜாமீன்  மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.இந்த நிலையில் சிதம்பரம் ஜாமின் மனு மீது இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.