கள்ள உறவால் நேர்ந்த விபரீதம்! தூக்கில் தொங்கவிடப்பட்ட பெண் ரயில்வே ஊழியர்!

சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில்வேலை செய்து வரும் மோகனாவும், ரூகேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே ரயில் நிலையத்தில் வேலை செய்து வருவதால் இருவருக்கும் மாறி மாறி வேலை இருந்து வந்துள்ளது.  இதனால் இருவரும் ஒன்றாக இருக்க முடியாத சூழல் உருவாகியது.

அந்த சமயத்தில் மோகனாவுக்கு வீராச்சாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீராச்சாமி ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வருபவர். இருவரும் பேசி பழகி நாளடைவில் அது கள்ளக்காதலாக உருமாறியுள்ளது. இந்த விஷயம் ரூகேஷிற்கு தெரிந்ததும் அவர், மோகனாவை திட்டியுள்ளார்.  ஆனால் அதனைக் கண்டு கொள்ளாத மோகனா வீராசாமியுடனான கள்ள காதலை தொடர்ந்துள்ளார்.

பின்னர்,  சென்னையில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து மோகனாவும், வீராச்சாமியும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது திடீரென அந்த லாட்ஜில் இருந்து வீராச்சாமி காணாமல் போயுள்ளார். இவர்கள் தங்கியிருந்த ரூம் மூடப்பட்டிருந்ததால். சந்தேகமடைந்த லாட்ஜ் உஊழியர்கள் அந்த ரூம் கதவை போலீசார் உதவியுடன் உடைத்து சென்று பார்த்தபோது, அந்த ரூமில் மோகனா தூக்கில் தொங்க விடப்பட்டிருந்தது தெரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், மோகனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர், தூக்கில் தொங்கவிட பட்டுள்ளது தெரிந்தது. அதன் பின்னர் போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கினர். போது மோகனாவுக்கும் வீராசாமிக்கும் கள்ளகாதல் வெளியில் தெரிந்துள்ளது.

பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் வீராசாமி பிடிப்பாட்டன். பிறகு வீராசாமியிடம் விசாரிக்கையில், மோகனாவும் வீராசாமியும் லாட்ஜில் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது, இருவருகுள்ளும் சண்டை வந்து முற்றி போய், மோகனவை கழுத்தை நெரித்து கொன்றதாக வீராசாமி ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அதிலிருந்து தப்பிக்க, மோகனாவை தூக்கில் தொங்கவைத்துவிட்டு தப்பித்து விட்டதாக போலீசாரிடம் வீராசாமி கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.